Monday, February 15, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 14

இந்திய தேசிய ராணுவ வீரர்கள்
தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்தனர்.ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அடுத்த தகவல் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பாதுகாக்க குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதில் ஜவஹர்லால் நேரு மற்றும் வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.  வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதே அது.

            (பிரேம் செகல். பின்னாளில் பெண்களின் படைத்தளபதி லெட்சுமியை மணந்தவர்.)
i
             (ஷா நவாஸ்கான்)
(குரு பக்ஷ் தில்லான்)
. டில்லி செங்கோட்டைக்கு மூன்று தளபதிகளையும்  கொண்டுவந்து  நிறுத்தினர்.  விசாரணை தொடங்கியது. அவர்கள்  மூவரும் இந்து, இஸ்லாம், சீீீீீக்கியம் என்ற மூன்று மதங்களைச் சார்ந்தவர்கள். பற்றாக்குறைக்கு இந்திய மக்களின் உணர்வுபூர்வ இடமான செங்கோட்டையில் வழக்கு நடந்தது.  அங்கு வைத்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் இந்தியர்கள் பொங்கி எழுவார்கள் என்ற பயம் ஆங்கில அரசாங்கத்திற்கு வந்து விட்டது.                         ஒரு நாள் வைத்திய நாதன், "வீரர்களே!ஒரு மகிழ்ச்சியான செய்தி.நமக்காக இந்தியா முழுவதும்  INA தினம் கொண்டாடினார்களாம். ஊர்வலம் நடத்தினார்களாம்.கல்கத்தா,பம்பாய்,சென்னை,விசாகப்பட்டினம்  ஆகிய இடங்களில் உள்ள கப்பல் படை வீரர்கள் இனிமேல் ஆங்கில அதிகாரிகளின் ஆணைப்படி நடக்கமாட்டோம் எனக் கூறிவிட்டார்களாம்."என்றான்.மருதவாணன்,"ஒரு  துக்ககரமான செய்தியும் உள்ளது.ஆங்கிலேயர் INA தினத்தன்று ஊர்வலம் சென்றவர்கள்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.அதில் 35 பேர்  இறந்து விட்டனராம்." என்றான். "கடவுளே! எங்களுக்காக முன்பின் தெரியாதவர்கள் உயிர் நீத்திருக்கிறார்களே.அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்." என்றான் ஒருவன்.  திறமையான வாதத்தால்  வழக்கின் முடிவில் தளபதிகள் மூவரும் விடுவிக்கப் பட்டனர். சில நகரங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த  வீீரர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். செய்தியை அறிந்த வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  பாரதம் இந்தியா,பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு விடுதலை பெறுகிறது என்பதைக் கேட்டதும்  வருத்தம் அடைந்தனர். "இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் தானே  நாம் போராடினோம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த நம்மைப் பிரித்து விட்டார்களே. " என்று மருத வாணன் புலம்பினான். "இந்த ஆங்கிலேயர்கள் நம்மை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிக்க. ஆரம்பித்து விட்டனர்".என்றான் வைத்திய நாதன். எல்லைப் பகுதிகளில் நடந்த மதக் கலவரங்களைப் பற்றிய செய்திகள் வந்ததும் கண்ணீர் விட்டனர்.  1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர இநதியாவைக் காண்பதற்கு நேதாஜி இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால்  வெளிநாடுகளில் சிறையில் வைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தினரை விடுதலை செய்யும் முயற்சியில் இறங்கினார். ஆங்கில அரசாங்கம்  பர்மா சிறை அதிகாரிகளுக்கு  இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.சிறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அத்துடன் அவர்கள் செய்த வேலைகளுக்கு ஏற்ப ஊதியத்தையும்  கணக்கிட்டனர். பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவாக விடுதலை செய்தனர்.நாடு விடுதலை அடைந்து பல மாதங்களுக்குப் பிறகு அவர்களது குழுவை விடுதலை செய்ய உத்தரவு  வந்தது.பாரத் மாதா கி ஜய்  என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
                                   தொடரும்.                 

No comments:

Post a Comment