Tuesday, February 11, 2020

கங்காரு தேசம் 31

பிரிஸ்பேனை விட்டுக் கிளம்புமுன்  மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஷாப்பிங் சென்றோம்.மழைத் தூரல்அன்று விட்டுவிட்டு  விழுந்து கொண்டிருந்தது.எனவே Mt.Gravatt பகுதியில் இருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்றோம்.ஆலிவ் ஊறுகாயில் ஒரு வகை நம்முடைய மாவடு போல புளிப்பான நீரில் காரமின்றி ஊறிக் கொண்டு இருக்கிறது. அதை பிரட் சாண்ட்விச்சில் தடவி உண்கிறார்கள்.மற்ற ஒரு வகை உப்பு, பூண்டு,மிளகாய்த்தூளுடன் எண்ணெயில் பதப்படுத்தப் பட்டது. அதுதான்  நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றியது.அதை வாங்கியவுடன் பயன்படுத்த வேண்டும்.நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது.எனவே அதை கடைசி நாளில் வாங்கினோம். சாக்லெட், பிஸ்கட் ஆகியவற்றையும்  வாங்கினோம். மறுநாள் காலை தங்கையிடமும், மகள்களிடமும் விடை பெற்றுக் கிளம்பினோம். மைத்துநர் முருகனுடன் காரில் விமான நிலையத்திற்கு  வந்து சேர்ந்தோம். 
லக்கேஜ் பேக்  அனைத்தையும்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டரில் ஒப்படைத்தோம். போர்டிங் பாஸை பெற்றுக் கொண்டு அமர்ந்து   தங்கை கொடுத்த இட்லியை சாப்பிட்டோம்
                                                         பாஸ்போர்டை சரிபார்த்தது.அடுத்து வைக்கப் பட்டிருந்த காமிரா  ஃபோட்டோ எடுத்தது.பின்னர்  கதவு திறந்து வழி விட்டது.விமானம் நிற்கும் இடத்திற்கு வந்தோம். செக்யூரிடி செக் செய்த போது  கைப்பையும்,வளையலையும் ஸ்கேன் செய்தார்கள்.பின் எங்களையும் சோதித்து அனுப்பினார்கள். காலை 9.10க்கு  விமானம் கிளம்பியது. பிரிஸ்பேனில் இருந்து சிங்கப்பூர் செல்ல பயண நேரம் 7மணி15 நிமிடமாகும்  என அறிவித்தார்கள். பிரிஸ்பேன் ஆறு வளைந்து செல்வதையும் நகரின்உயர்ந்த கட்டிடங்களையும் வானில் இருந்து கண்டோம்.ஆஸ்திரேலியா கண்டத்தைக் கடக்கவே 3 மணி நேரமாகி விட்டது.சில இருக்கைகள்  காலியாக இருந்தன.கரோனா வைரஸ்  பயம் காரணமாக இருக்கலாம்.இருக்கையின் முன் இருந்த மானிட்டரில் ஒரு தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 10 நிமிடம்  ஆகும் முன்பே  படம் நின்று விட்டது. எனவே கேசரி என்ற இந்தி சினிமாவைப் பார்த்தேன். ஆங்கிலேயர் கால சீக்கிய ராணுவ வீரனைப் பற்றிய கதை.நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் ஆனதும் விமானத்தில்  எங்களுக்கு வெஜிடபிள் நூடுல்ஸ்,
பழசாலட்,பன் வழங்கப்பட்டன. நூடுல்ஸை  ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடத் தெரியவில்லை. சிறிது மட்டுமே சாப்பிட்டேன். இறங்கும் முன்பு தக்காளி,சீஸ் தடவப் பட்ட சாண்ட்விச்  தரப்பட்டது.காஃபி,டீயை வேண்டாம் என்று கூறி விட்டோம். சிங்கப்பூர் நேரப்படி 2.30. மணிக்கு சாங்கி விமான நிலையம் டெர்மினல் 3ல் இறங்கினோம். அடுத்து 8.20 க்குத் தான் சென்னைக்குச் செல்லும் விமானம் ஏற வேண்டும்.நன்றாக விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ,ஒருவருக்கு  20 டாலர்களுக்கு கிஃப்ட் வவுச்சர் வழங்கப்படும்.I shop, Changi என்ற இடத்திற்குச் சென்று போர்டிங் பாஸைக் காட்டி 40 டாலர்களுக்கான வவுச்சரைப் பெற்றுக் கொண்டோம். அதைக் காட்டி விமான நிலையத்திற்குள்  மீண்டும் ஷாப்பிங். பேரன்,பேத்திகளுக்கு விளையாட பொம்மை விமானம், சாக்லெட் வாங்கினோம்.மேலும் 100 டாலர் செலவானது.T3 ல் இருந்து T2க்குச் செல்லும்  Sky trainல் சென்று பாதையில் Jewel விமானநிலையத்தைப் பார்த்தோம். விசா இருந்தால் மட்டுமே உள்ளே செல்லலாம்.
பெரிய செயற்கை அருவி இருந்தது.
காடு போல் மரம்,செடிகள் காட்சி அளித்தன.
Sky trainல் இருந்துதான் படங்களை எடுத்தோம்.Terminal 2ல் இறங்கி காவேரி ரெஸ்டாரண்டில் தோசை சாப்பிட்டோம்.நம் ஊரைப் போலவே 2 வகை சட்னி சாம்பாருடன் சுவையாகஇருந்தது.பின்னர் அந்தப் பகுதியையும் சுற்றிப் பார்த்தோம். விமானநிலையம் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


மீண்டும் Terminal 3க்கு வந்து நாங்கள் ஏறவேண்டிய இடத்திற்கு வந்தோம்.Security check முடித்தவுடன்Form ஒன்றைக் கொடுத்தார்கள். அதை நிரப்பி சென்னையில் இறங்கியவுடன்  அங்குள்ள medicalCheck up குழுவிடம்  கொடுக்குமாறு கூறினார்கள். எங்களுடைய முழு விவரங்களுடன் சீனா சென்று வந்தோமா 
என்பதையும் எழுத வேண்டியிருந்தது.  சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.20க்கு விமானம் கிளம்பியது.இருக்கைகள் நிறைந்திருந்தது.தமிழர்கள் தான் அதிகம்.வெளிநாட்டவர் குறைவாகத் தான் இருந்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின் உணவு வழங்கப் பட்டது. சாதம், பருப்பு,குருமா,காய்றி சாலட்,தயிர், ஊறுகாய் ஆகியவற்றுடன் ஐஸ்கிரீமும் தரப்பட்டது.வயிறார உண்டோம். 4 மணி நேரத்தில் சென்னைக்கு வந்து விட்டோம். இந்திய நேரப்படி 9.55 க்கு இறங்கினோம்.மருத்துவர் குழு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.காய்ச்சல் உள்ளதா என அறிய Thermal test நடத்தப்பட்டு ரிசல்ட் தரப்பட்டது.அதைப் பெற்றுக் கொண்டு immigration ல் காட்ட பாஸ்போர்டில் ஸீல் செய்து வெளியே அனுப்பினார்கள்.லக்கேஜ் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.மகன் எங்களுக்காகக் காத்திருந்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு நம் தாய்த் திருநாட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  கங்காரு தேசத்தை காணச் செய்த இறைவனுக்கு நன்றி.
                    முற்றும்.


No comments:

Post a Comment