சிங்கப்பூர் விமான நிலையத்தின்
டெர்மினல் 2ல் நாங்கள் இறங்கினோம்.உள்ளே உட்கார வசதியாக இருக்கைகள் இருந்தன.ஜாய் ஃபுல் சிங்கப்பூர் என்ற பாடல் நினைவிற்கு வந்தது.
அந்த நிலையத்தின் இலவச wifiஐ
பதிவிறக்கம் செய்து கொண்டோம்.
முதலாவதாக பிரிஸ்பேனில் இருக்கும் தங்கை கணவருக்கு வாட்ஸ் அப் கால் செய்து தகவல் தெரிவித்தோம்.பின் மகனிடம் பேசினோம்.அவன் சாங்கி விமான நிலையத்தின் வரைபடத்தை பதிவிறக்கி தந்திருந்தான்.
காவேரி வெஜிடேரியன் க்யிஸின் என்னும் உணவகத்தைத் தேடினோம்.பணியாளர் ஒருவர் வழி
காட்டினார். காஃபி மட்டும் வாங்கினோம்.நம் ஊர் கப் போல இருக்கும் என நினைத்து ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்தோம்.அது 3 மடங்கு பெரியதாக இருந்தது. அருந்தி விட்டு மெல்ல நடந்தோம்.
அடுத்த விமானம் டெர்மினல் 3ல் இருந்து கிளம்பும்.ஆங்காங்கே ட்ராவலேட்டர்கள் இருந்தன. கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தோம்.ஸ்கை ட்ரெயினில் ஏறி T3க்கு வந்து சேர்ந்தோம்.உரிய இடத்தில் வந்து அமர்ந்தோம்.போர்டிங் பாஸ் சென்னையிலேயே தந்து விட்டார்கள்.
செக்யூரிட்டி செக் முடிந்த பின் பிரிஸ்பேனில் இறங்கியதும்
அங்கு நாங்கள் தர வேண்டிய இம்மிகிரேஷன் ஃ பார்ம் சிங்கப்பூரிலேயே தரப்பட்டது.
அதில் எழுத வேண்டிய முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களை ஏற்கெனவே குறித்து
வைத்து இருந்தோம்.எனவே எளிதாக நிரப்பி விட்டோம்.அழைப்பு
வந்ததும் ஏறினோம்..சரியாக சிங்கப்பூர் நேரம் 9.45 a.mக்கு
விமானம் கிளம்பியது.
தொடரும்.
No comments:
Post a Comment