Thursday, November 28, 2019

கங்காரு தேசம் 4

இந்தியப் பெருங்கடலின் மேலே
              சிங்கப்பூர் விமானப் பணிப் பெண்கள்  முகமன் கூறி வரவேற்றனர்.செய்தித் தாட்களும், இயர் ஃபோனும்   இருந்தன.                இயர்ஃபோனை மட்டும் எடுத்துக்
கொண்டோம். சூடான டவலைத் 
தந்தார்கள்.தயக்கமின்றி வாங்கி முகத்தைத் துடைத்துக் கொண்டோம்.
விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது.பல நாட்டவர்கள்
இருந்தனர்.தமிழகத்து இளம் தம்பதிகள் ஒருவர்  தங்கள் மகனுடன் அமர்ந்திருந்தனர்.
                  முன் தின இரவு தூங்காததால்  தூங்க முயன்றேன்.ஆனால் தூக்கம் வரவில்லை.மானிட்டரை ஆன் செய்ய முயற்சி செய்தேன்.ஒரு வழியாக அது இயங்க ஆரம்பித்தது.Dora and the lost city of gold என்ற படத்தைப் பார்த்தேன்.காலை  உணவைத் தவிர்த்து விட்டு விமானம் ஏறி இருந்தோம்.எனவே சாப்பிட்டு  10 மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.பசிக்க 
ஆரம்பித்தது.கொடுக்கப் பட்டிருந்த
மெனுவில் சைவ உணவுகள் இல்லை.இன்று உண்ணா விரதம் தான் என்று நினைத்துக் கொண்டேன். 
                 வரிசையாக உணவு விநியோகம் செய்யப்பட்டது.  எங்களிடம் வந்த போது வெஜிடேரியன்  என்றோம்.சிறிது 
நேரத்தில் வந்தது. டோக்ளா, கீரை,
பீன்ஸ், ஜாம் ,.அத்துடன் சிறு
பன்,பட்டரும்  இருந்தது.காஃபியைத்
தவிர்த்து   ஆரஞ்சு ஜூஸைக்  குடித்தோம். ஐஸ்கிரீம் வந்தது.வயிறு 
நிறைந்தது.ஜன்னல் திரைகள் போடப்பட்டு இருளாக இருந்தது.  எனினும் தூக்கம் வரவில்லை.
விமானத்தின்  மானிட்டர் திரையில் 
சிங்கப்பூர் நேரம், பிரிஸ்பேன் நேரம் இரண்டும் காட்டப் பட்டன. கடந்த தூரம் ,கடக்க வேண்டிய தூரம் ஆகியவையும்  காட்டப் பட்டன.மொத்தம் 8 மணி நேரப் பயணம் என்பதால்  மலைப்பாக இருந்தது. பிரிஸ்பேன் நேரப்படி
5.30 p.mக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.எங்களுக்கு மஃபின் 2
தரப்பட்டது.காஃபி,தேநீரைத் தவிர்த்து தண்ணீர் மட்டும் அருந்தினோம். பொழுதுபோக்குககாக  I am a mother என்ற படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.படம் முடியும் முன்னரே விமானம் சற்று நேரத்தில்
தரையில் இறங்கத் தொடங்கும் என்று அறிவிப்பு வந்து விட்டது.
படத்தை நிறுத்தி விட்டேன்.எட்டாம் 
வகுப்பில் படித்த போது புவியியல் 
பாடத்தில் ஆஸ்திரேலியா இருந்தது.உலக வரைபடத்தையும்,
ஆஸ்திரேலியா வரை படத்தையும்
காட்டி பாடம் நடத்திய எனது ஆசிரியை நினைவில் வந்தார்.இப்போது அதில் காலடி வைக்கப் போகிறோம்.விமானம் தரையைத் தொட்டது.பத்திரமாக வந்ததற்கு  இறைவனுக்கு நன்றி 
கூறினேன்.
                விமானப்  பயணிகள் சென்ற
வழியில் பின் தொடர்ந்தோம்.செல் 
ஃபோனை ஆன் கூட செய்யவில்லை.
இம்மிகிரேஷன் பிரிவை அடைந்தோம். Frequently asked questions in immigration என்ற வீடியோவை  திரும்ப திரும்பப் பார்த்து  கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தயாராக இருந்தோம். அதிகாரி எங்களை அழைத்தார்.
புன்முறுவலோடு எங்கள் பாஸ்போர்ட்
மற்றும் இம்மிகிரேஷன் பார்மைப் 
பார்வையிட்டார். ஒன்றும் கேட்கவில்லை. Thank you என்று கூறி  பாஸ்போர்ட்டைத் தந்தார்.முன்னால் 
சென்றவர்களைத் தொடர்ந்து லக்கேஜ்களை எடுக்கச் சென்றோம்.
சுற்றிக் கொண்டு இருந்த பெல்ட்டில் இருந்த அவற்றை எடுத்துக்
கொண்டோம். இன்டர்நெட்டில்  விமானம் இறங்கியதைப் பற்றி அறிந்ததும் மகன் எங்களை செல் ஃபோனில் திரும்பத்திரும்ப
அழைத்திருக்கிறான்.தொடர்பு கொள்ள முடியாததால்   கலக்கம் 
அடைந்து  ஆஸ்திரேலியாவில் உள்ள சித்தப்பாவைத் தொடர்பு கொண்டு 
பேச , அவர்  பயணிகள் வெளியே
வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலைக் கூறியுள்ளார்.நாங்கள் வெளியேறும் வழியில் நின்று கொண்டு இருந்த மைத்துனர் எங்களைப் பார்த்து விட்டார்.முன்னே வந்து வரவேற்றார். எனது மகனுக்குத்  தகவல் தந்தார்.பின்னர் தங்கை, சிறிய மைத்துனர்
இருவருக்கும் எங்களது வருகையைத் தெரிவித்தார். காரில்  ஏறி  வீட்டை நோக்கிப் பயணம்  செய்தோம்.
                             தொடரும்.

No comments:

Post a Comment