Tuesday, January 5, 2021

இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 9

நேதாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியது. சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு சுதந்திர இந்தியாவை அறிவித்தார்.தானே பிரதமராகவும்,
ராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.அமைச்சரவை அமைக்கப் பட்டது.மகிழ்ச்சியில் வெளி நாட்டு இந்தியமக்கள் தங்களால் இயன்றவரை பொருளுதவி செய்தனர்.ஒரு வங்கியையே தொடங்கும் அளவிற்கு நிதி திரண்டது. Bank of Independence என்ற புதிய வங்கியைத் தொடங்கினார்.  நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. (இது நேதாஜியின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டின் படம்.இந்திய தேசிய ராணுவம் பயன்படுத்த தனது இடத்தைக் கொடுத்த பிராகிலால் என்ற வீீீரருக்குத் தரப்பட்டது. ராமாயணப் புத்தகத்தில்  பத்திரமாக வைத்திருந்த அந்த ரூபாய்த்தாள்
அவரது மகனால் பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப் பட்டது.)  தன் வீரர்களுக்குக்  கடுமையான பயிற்சி அளித்தார்.படை வீரர்களின் முகாம்களுக்குச் சென்று வீர உரையாற்றினார்.ஒரே ஒரு முறை வைத்தியநாதன் இருந்த படைப் பிரிவிற்கு வந்தார்.அவரது கம்பீரமும், சிங்கம் போன்ற முழக்கமும்  அனைவரையும் கவர்ந்தது.தங்களது தலைவனை நேரில் கண்டது பெரும் உற்சாகத்தைத் தந்தது.ஆஸாத் ரேடியோவில் அடிக்கடி பேசி தேசிய உணர்வை ஊட்டினார்.பர்மா ,மலேசியா நாடுகளில் இருந்த வீரர்கள் அதைக் கேட்டு எழுச்சி பெற்றனர்."டெல்லி சலோ"என்ற முழக்கம் கேட்டதும் ராணுவம் இந்தியாவை நோக்கி முன்னேறியது.    
தரைப்படைக்கு தில்லான் தலைமைப் பொறுப்பேற்றார்.பெண்கள்
படையை லெட்சுமி சுவாமிநாதன் வழிநடத்தினார்.பெண்களின் படையைக் கண்டு அனைவரும்  வியந்து போனார்கள். மருதவாணன்,"பார்த்தாயா வைத்தியநாதா! நம் பெண்கள் ஆங்கிலேயரை விரட்ட களம் இறங்கி விட்டனர்." என்றான். " வீரமங்கை வேலு நாச்சியாரும்,ஜான்சி ராணியும் பிறந்த மண் நம் பாரதம். வீரமும்,தீரமும் பெண்களிடம்  உள்ளது." என்றான் வைத்தியநாதன். அடிக்கடி  வானொலியில் வீரர்களிடம் பேசினார். "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல. எடுக்கப்படுவது".என்று முழங்கினார்."குழந்தை அழுது புரட்சி செய்துதான் தனக்குத் தேவையானதைப் பெறுகிறது." என்றார். ராணுவத்தினர் அவரது உரையாடலால் எழுச்சி பெற்றனர். "கதம் கதம் படாயே "
என்ற  அணிவகுப்புப் பாடல் இந்தியர்களின் தேசபக்திப் பாடல் ஆகியது.இந்திய தேசிய ராணுவம்  படிப்படியாய் நகர்ந்தது. "மருதவாணா! உனக்குத் தெரியுமா?பெண்கள் அணியில் தற்கொலைப் படை உருவாக்கப் பட்டுள்ளது". என்று வைத்தியநாதன் கூறியதும் "அப்படியா? " என்றான் மருதவாணன். "ஆங்கிலேயரின் பீரங்கிகள் வரும் போது வெடி குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வழியில்  படுத்துக் கொள்ளப் போகிறார்களாம்." என்று வைத்தியநாதன் கூறினான்.. இந்திய தேசிய ராணுவம்,ஆங்கில ராணுவத்தைப் படிப்படியாக வென்று 
மணிப்பூர், இம்பால்,கொஹிமா வரை முன்னேறிச் சென்று விட்டது. இது ஆங்கிலேயருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய தேசிய ராணுவத்தை அடக்க திட்டம் இட்டனர்.  
                        தொடரும்.





No comments:

Post a Comment