Tuesday, October 11, 2022

சாய் தரிசனம்.5.துவாரகாமாயி

துவாரகாமாயி  காட்டப்படும் அரங்கத்தில் நுழைந்தோம். துவாரகாமாயி என்ற பாபா வசித்த மசூதியின் வடிவம் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. அதன் உள்ளும்,புறமும் தீபங்கள் 
ஜொலித்தன.  பகவான் சாய்பாபாவின்   திருவுருவம் தோன்றியது. சீடர்கள் இருவர்
தோன்றினர்.   பார்ப்பதற்கு  உண்மையான மனிதர்கள்  போலவே இருந்தனர். இந்த அமைப்பை Humanoid form என்கிறார்கள்.பாபா நம் கண் முன்னே தோன்றி உரையாற்றினார்.கைகளை அசைத்து,வாய் திறந்து பேசினார்.அறிவுரைகள் வழங்கினார்.நாங்கள் மெய்சிலிர்த்து நின்றோம்.அரை
மணிநேரம் சென்றதே தெரியவில்லை.
                 அடுத்து தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினோம். ஆறு பேர் அமரக் கூடிய சிறு ரயில் பெட்டிகள் வந்தன.அதில்
அமர்ந்தோம்.
மும்பைக்குச் சென்றோம்.மும்பையின் நவநாகரீக மக்களும், டப்பாவாலாவும் வரவேற்றனர். சித்தி விநாயகர் கோவிலின்  நுழைவு வாயிலில் நுழைந்தோம்.விநாயகரை வழிபட்டோம்.பகவான் ஸ்ரீீகிருஷ்ணனின் நகரமான துவாரகாபுரிக்குள் சென்றோம்.துவாரகாதீஷ் தரிசனம் கிடைத்தது.கேதார நாத் தலத்தில் பண்டிதர்கள் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருந்தனர். நந்திக்கு எதிரில் சிவபெருமான் காட்சி தந்தார்.அடுத்த திருத்தலம் பத்ரிநாத்.இரு மலைகளுக்கு இடையே பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. பத்ரிநாதரைக் கண்டு கை தொழுதோம்.இமயமலை அடிவாரத்தில் உள்ள இத்தலங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைக்குமா ?எனத் தெரியவில்லை. 
அமிர்தசரஸ் நகரம் வந்து விட்டது.சீக்கியப் பெருமக்கள்  தங்கள்  வேலைளைச் செய்து கொண்டிருந்தார்கள். பொற்கோவிலுக்குள்  குருகிரந்த சாகிப்    புத்தகம் முன் அமர்ந்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். பூரீ மாநகரில்   ஜகன்னாதர்,பலராமர், சுபத்திரையுடன்  காட்சி தந்தார்.மணல்  சிற்பங்களும் இருந்தன.  பண்டரிபுரத்தில்     பாண்டுரங்கனைச் சேவித்தோம். நம் கண் முன்  அன்னை மீனாட்சியின் கோபுரம்  காட்சி தந்தது.உண்மையாகவே உள்ளே வந்தது போல் இருந்தது.யாளிகளுடன் தூண்கள் இருந்தன.நடன மங்கைகள் காட்சி தந்தனர். அன்னை மீனாட்சி கரத்தில் தங்கக் கிளியுடன் அருள் பாலித்தாள்.அடுத்ததாக திருப்பதி ஏழுமலையான்  தரிசனம் தந்தார்.தெய்வ தரிசனம் நிறைவுபெற்றது. பழைய ஷீரடியின் தோற்றத்தைக் காட்சி படுத்தியிருந்தனர். அதைக் கண்டு விட்டு அந்த அரங்கை விட்டு வெளியே வந்தோம்.                  டாட்டூ போடும் இடம்,பிரசாதம் விற்கும் கடை,ஆடைகள் விற்பனையகம்,அணிகலன்கள் கடை, ஃபோட்டோ ஸ்டுடியோ என சில கடைகள் இருந்தன.கரும்புச் சக்கையிலிருந்து பெறப்பட்ட இழையால் ஆன புடைவை ஒன்று வாங்கினோம்.ஒரு சிறு உணவகம் இருந்தது. பெரியவர்கள் தேநீீர் அருந்தினோம். குழந்தைகள் பாவ் பாஜி சாப்பிட்டார்கள். சாய் பாபாவின் முன்னால் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.அங்கு வேலை பார்க்கும்  நபரே  ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தார்.
மறுநாள் மீண்டும் பாபாவைத் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும்.
தொடரும்.
           

No comments:

Post a Comment