THE SYDNEY TOWER EYE
இங்கு கஃபே ஒன்றும் உள்ளது. Deckன் மேல் பகுதியில் Sky walk என்ற
இருந்து மேல் முனைப் பகுதிவரை 309 மீட்டர் உயரம் கொண்டது. 1504
படிகளைக் கொண்டது. ஆகஸ்ட் மாதம் மட்டும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக Sydney tower stair challenge என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.அப்பொழுது மட்டும் மக்கள் படிகளில் ஏறுகின்றனர். இக்கட்டிடம் West field நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதைத் தவிர இரு நிறுவனங்கள் அதை நடத்த உதவுகின்றன.
இந்த டவரை நிலைநிறுத்த 56 கேபிள்களும்,1,62,000 லிட்டர் கொள்ளவுள்ள தண்ணீர்த் தொட்டியும் உள்ளதாம்.நான்காவது தளத்தில் 4 D சினிமா தியேட்டர் உள்ளது.அதற்கான கண்ணாடியைத் தந்தார்கள்.அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். நின்று பார்க்க வேண்டியிருந்தது. சிட்னியின் கடல் அலைகள் நம்மை நோக்கி வீசின. காற்றின் ஒலியும் காதுகளில் ஒலித்தது.நீர்த் துளிகள் நம்மீது படுவது போல இருந்தது.கடல் மீது ஸர்பிங் செய்த காட்சி நாமே பயணம் செய்ததாக உணரச் செய்தது.
அதன் பின்னர் லிஃப்டில் ஏறி indoor observation deck ஐ அடைந்தோம்.
(Deckன் ஒரு பகுதி)
இது வட்ட வடிவில் அமைக்கப் பட்டிருப்பதால் சிட்னி நகரின் முழுப் பகுதியையும் காண முடிந்தது.
(ஹைட் பார்க்கின் தோற்றம்)
இங்கு கஃபே ஒன்றும் உள்ளது. Deckன் மேல் பகுதியில் Sky walk என்ற
பகுதி உள்ளது. அங்கு செல்ல குறிப்பிட்ட குறைந்த அளவு எண்ணிக்கையில் மக்கள் மாலை 6 மணி வரை அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்பகுதியின் தரைத்தளம் முழுவதும் கண்ணாடியாலானது.மன தைரியம் இருந்தால் அதில் நடந்து கொண்டே மிக உயரத்தில் இருந்து நகரை ரசிக்கலாம்.முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.நாங்கள் அங்கு செல்லவில்லை.
(Downloaded picture)
விளக்கொளியில் நகரத்தைக் காணலாம் என நினைத்தோம். ஆனால் கோடைகாலம் என்பதால் சூரியன் மாலை 6.30 மணியாகியும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.எனவே அங்கிருந்து கிளம்பினோம். இரவு உணவை முடித்து விட்டு கிளம்ப முடிவு செய்தோம். சற்று தூரம் நடந்து வெஸ்ட் ஃபீல்டு ஷாப்பிங் மாலை அடைந்தோம். பொதுவாக எல்லா ஷாப்பிங்களிலும் பல நாடுகளின் உணவகங்கள் இருக்கும்.இந்திய உணவகமும் கண்டிப்பாக இருக்கும். North Indian Flavour என்ற உணவகம் இருந்தது. நாண் மற்றும் வெஜிடபிள் குருமா சாப்பிட்டோம். நம் நாட்டில் சாப்பிடுவது போன்றே இருந்தது. மற்றோர் பகுதியில் Mumbai express என்ற உணவகமும் இருந்தது. பின்னர் நாங்கள் தங்கி இருந்த Hotel Macleayக்கு வந்து சேர்ந்தோம்.
தொடரும்

No comments:
Post a Comment