சிட்னியில் மூன்றாவது நாள் காலை சுற்றுலா பேருந்தில் ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தோம்.அது 2 மணிக்குத் தான் நிறைவு பெறும். மதியஉணவை முடித்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து கிளம்புவது வீண் அலைச்சலாகும் என நினைத்தோம்.மாலை 5 மணிக்கு ஏர்போர்ட்டிற்குச் சென்று 6 மணிக்குக் கிளம்பும் tigerairல் கிளம்ப எண்ணி காலை 11.30 மணி வரை
மட்டுமே அறையை முன்பதிவு செய்திருந்தோம்.காலை 5 மணிக்கு விமானநிறுவனம்,மாலை 6மணிக்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப் பட்டதால் 9.30க்குக் கிளம்பும் virgin australia விமானத்தில் பயணம் செய்யுமாறு குறுந்தகவல் அனுப்பியது.சிட்னிக்கு எங்களை விட மனமில்லையோ என நினைத்துக் கொண்டேன்.
காலை உணவாக பிரெட் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்கு தயிர் சாதம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.அறையைக் காலி செய்து பெட்டிகளோடு கிளம்பினோம். கடந்த இரு நாட்களில் நாங்கள் பயணம் செய்த கார்களின் டிரைவர்கள் லெபனான், ஈரான்,பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இன்று வந்தவர் நம் நாட்டு சீக்கியர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
HYDE PARK
Anzac war memorial பூங்காவின் ஒரு பகுதியில் இருந்தது.நாங்கள் சென்றபோது அது மூடியிருந்தது. அதன் முன்னால் இருந்த குளத்தின்
நீரில் அக்கட்டிடம் பிரதிபலிக்குமாம். மேகமாக இருந்ததால் நாங்கள் பார்க்க இயலவில்லை.
சாலையைக் கடந்து பூங்காவின் மறுபகுதிக்குச் சென்றோம். பெரிய மரங்கள் அடங்கிய சோலை போல இருந்தது.
நடுவில் Archibald fountain உள்ளது. பாரிஸ் நாட்டு சிற்பக் கலைஞர்கள் வடித்த சிற்பங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன.

No comments:
Post a Comment