BOTANICAL GARDEN,MT.COOT THA
வாழை மரம் போல் இருந்த மரங்ளும்,அதன் பூக்களும் என்னைக் கவர்ந்தது. தாவரவியல் படிக்கவில்லையே எனத் தோன்றியது.அடுத்தது Fern house சென்றோம். பெரணி என்றால் ஒரு வகை மட்டுமே எனக்குத் தெரியும். நிறைய வகைப் பெரணிகளை அங்கு கண்டோம்.
நம் நாட்டு அரச மரமும் ஓரிடத்தில் இருந்தது. குல்மோகர் மரங்களில் பூக்கள் நிரம்பி வழிந்தன.செயற்கை நீரோடை குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.குளத்தில் அல்லிப் பூக்கள் மலர்ந்திருந்தன.
ஓரிடத்தில் இலையே இல்லாமல் பூ மட்டும் பூத்திருந்தது.
பூங்காவிற்குள் திருமணம் நடத்த புல்வெளிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.அங்கு திருமணங்கள் நடைபெறுமாம்.ஓரிடத்தில் இசை எழுப்பும் கருவி வைக்கப் பட்டிருந்தது.
மரப்பொந்தில் தேன்கூட்டையும்,கொடுக்குகள் இல்லாத தேனீக்களையும் கண்டோம். பழங்குடிமக்களான அபார்ஜின்களின் மொழியில் கூத் என்றால் தேன். அதிக அளவில் தேன் எடுக்கப் பட்டதால் இந்த இடம் கூத்தா எனப்பெயர் பெற்றதாம். இறைவனின் படைப்பில் எத்தனை
இயேசு கிறிஸ்து சிலுவையில்அறையப்பட்ட போது மேலே இடம் பெற்றுள்ள செடியால் தான் கிரீடம் வைத்ததாகச் சொன்னார்கள்.உயிரியல் பூங்காவில் நாங்கள் கண்ட தாவரங்களைப் பற்றி ஓரளவுதான் எழுதியுள்ளேன்.பல தகவல்களைத் தந்த எங்களது வழிகாட்டிப் பெண்மணிக்கு நன்றி கூறி வெளியே வந்தோம்.
கூத்தா மலையடிவாரத்தில் பசுமையான உயிரியல் பூங்கா உள்ளது.56 ஹெக்டேர் பரப்பளவில், இரண்டு லட்சம் மரம்,செடி, கொடிகள் இங்கு வளர்க்கப் படுகின்றன.1970ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1976ல்
திறந்து வைக்கப்பட்டது.
நாங்கள் காலை 11 மணிக்கு உயிரியல் பூங்காவை அடைந்தோம்.அங்கு எங்களை வழிநடத்திச் செல்ல ஒரு பெண்மணி வந்தார்.கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்கள்,இந்தியாவில் இருந்து வந்த நாங்கள் ,ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற என் தங்கையின் குடும்பம் என்று 8 பேர் கொண்ட குழு தனியாகப் பிரிக்கப்பட்டது. நான்கு நாட்டவர்கள் இருப்பதை அறிந்த
வழிகாட்டிப் பெண் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்.முதலில்
எங்களை நறுமணம் வீசும் செடிகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.அவற்றின் இலைகளைக் கிள்ளி எங்களை முகர்ந்து பார்க்கச்
சொன்னார்.பூண்டு மற்றும் நார்த்தை இவற்றின் மணத்தை என்னால் உணர முடிந்தது.lavender,lemon myrtle, Plumeria போன்றவற்றைக் கண்டோம்.
பாலைவனத் தாவரங்களும் இருந்தன.Aloevera, cactus ஆகியவை இருந்தன. பெரிய கற்றாழைச் செடிகள் வளர்க்கப் பட்டிருந்தன.
கள்ளிச் செடிகளும் இருந்தன.Tropical dome அமைக்கப் பட்டுள்ளது.
அதில் நாங்கள் கண்ட சிலவற்றின்
படங்களைப் பதிவு இடுகிறேன்.
வாழை மரம் போல் இருந்த மரங்ளும்,அதன் பூக்களும் என்னைக் கவர்ந்தது. தாவரவியல் படிக்கவில்லையே எனத் தோன்றியது.அடுத்தது Fern house சென்றோம். பெரணி என்றால் ஒரு வகை மட்டுமே எனக்குத் தெரியும். நிறைய வகைப் பெரணிகளை அங்கு கண்டோம்.
Japanese garden என்ற பிரிவையும் பார்த்தோம்.
Kitchen garden பிரிவில் கத்திரிக்காய், வெண்டைக் காய்,சுரைக்காய்,பல நிறங்களில் சிறிய மிளகாய் என பல வகைச் செடிகள் இருந்தன. கத்திரிக்காய் செடி மரம் போல இருந்தது.
அருகில் சமையல் செய்ய மைக்ரோ வேவ் அடுப்பு உள்ளது.பள்ளிக் குழந்தைகள் வந்தால் காய்களைப் பறித்து,சமைத்துக் காட்டுவார்கள் எனக்கூறினார்கள்.ஆலிவ்செடியைஇங்கு தான் பார்த்தேன்.
முற்காலத்தில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மரப்பட்டைகள் கொண்ட மரத்தை எங்களுக்குக் காட்டினார்.பட்டையை உரித்து அதைத் தொட்டுப் பார்க்கச் செய்தார். பேப்பரைத் தொட்டது போல இருந்தது.மரத்தின் பெயர் Paper bark tea tree என்று கூறினார்.
குழந்தைகளை மகிழ்விக்க ஆங்காங்கே விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மரப்பொந்தில் தேன்கூட்டையும்,கொடுக்குகள் இல்லாத தேனீக்களையும் கண்டோம். பழங்குடிமக்களான அபார்ஜின்களின் மொழியில் கூத் என்றால் தேன். அதிக அளவில் தேன் எடுக்கப் பட்டதால் இந்த இடம் கூத்தா எனப்பெயர் பெற்றதாம். இறைவனின் படைப்பில் எத்தனை
அதிசயங்கள் உள்ளன என வியப்பு
ஏற்பட்டது.
தொடரும்.

No comments:
Post a Comment